search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
    X

    தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

    • தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று ஒரு நாள் அகில இந்திய அளவில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்கள், 65 துணை தபால் நிலையங்கள், 252 கிளை தபால் நிலையங்களில் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் இன்று 700 -க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் இயங்கும் 252 தபால் நிலையங்கள் மூடப்பட்டதால் பணிகள் கடுமையாக பாதித்தன. குறிப்பாக தபால் பட்டுவாடா, பண வர்த்தனை முடங்கியது.

    இதுகுறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க ஈரோடு கோட்டச் செயலாளர் வெள்ளியங்கிரி கூறியதாவது:-

    தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக தபால் பட்டுவாடா, பண பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடி கணக்கில் வர்த்தகம் முடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×