search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மோதி முதியவர் பலி
    X

    வேன் மோதி முதியவர் பலி

    • வேன் முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 62) சப்போட்டா பழ வியாபாரி.

    இவர் நேற்று இரவு அந்தியூரில் வேலையை முடித்துக் கொண்டு ஆப்பக்கூடல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராதவிதமாக முருகன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் செல்போன் மூலம் அவரது மகன் பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் உடலை பார்த்து கதறி அழுதார். இதை தொடர்ந்து அவரது உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அந்தியூர் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×