என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
- நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- நாகராஜ் வீட்டில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த கே.ஆர்.பாளையம் கே.கே.நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (35). லாரி டிரைவர். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
நாகராஜிக்கு மதுப்பழக்கம் உள்ளதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் சம்பவத்தன்று இரவு நாகராஜ் மது போதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதைப்பார்த்து பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
இதையடுத்து விஜயலட்சுமியும், அவரது மகள்களும் லீலாவதி என்பவர் வீட்டில் இரவு தூங்க சென்றனர். மறுநாள் மகள் வீட்டிற்கு வந்தபோது நாகராஜ் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயலட்சுமி சித்தோடு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்