search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

    • பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    ஈரோடு:

    விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் ரபி பருவங்களில் பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிரும், ரபி பருவத்தில் கரும்பு பயிரும் பிர்க்கா அளவில் அறிவி க்கை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் நெல் பயிருக்கு 28 பிர்கா க்களும், கரும்பு பயிருக்கு 30 பிர்காக்களும் அறிவிக்கை செய்யப் பட்டுள்ளன. அறிவிக்கை செய்ய ப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.557.25 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய ரூ.3115 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.

    அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    அறிவிக்கை செய்யப் பட்டுள்ள பிர்காக்களை சார்ந்த கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி 1433 ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகிய வற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    சம்பா நெல் பயிருக்கு வருகின்ற நவம்பர் 15-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். கரும்பு பயிருக்கு அடுத்த வருடம் மார்ச் 30-ந் தேதி காப்பீடு செய்யக் கடைசி நாளாகும்.

    இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடா மல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையுமாறு ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×