நில வருவாய்- கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் கிரு ஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.கிராம நிர்வாக அலுவலகத்தையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நில வருவாய்- கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
Published on

ஈரோடு:

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் வடக்கு நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில் கலெக்டர் கிரு ஷ்ணனுண்ணி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் மேட்டு நாசுவம் பாளையம் வடக்கு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப் பட்டு வரும் 'ஆ" பதிவேடு, கிராம கணக்கு பதிவேடு, அடங்கல், முதியோர் உதவித் தொகை பதிவேடு, புறம் போக்கு நிலங்கள் தொட ர்பான பதிவேடு, விளை நிலங்கள் தொடர்பான பதிவேடு உள்ளிட் ஆவ ணங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் மேட்டு நாசுவம் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் கட்டுவதற்கு முன் மொழிவு வழங்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலகத்தையும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com