search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ராணுவத்தினர், போலீசாருக்கு அழைப்பு
    X

    முன்னாள் ராணுவத்தினர், போலீசாருக்கு அழைப்பு

    • 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர்.
    • தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், போலீசாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 32 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    இதனையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு கம்பெனிலும் 80 பேர் உள்ளனர். இதை தவிர தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் 160 பேர் ஏற்கனவே வந்து விட்டனர்.

    துணை ராணுவத்தினர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் ஈரோட்டில் 27 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசாருடன் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக போலீசார் கிழக்கு தொகுதியை தவிர பிற தொகுதியை சேர்ந்த 50 வயதுக்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசார் என 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ஊர்க்காவல் படையினர் 150 பேர், என்.எஸ்.எஸ். மாணவர் களுக்கும் பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×