மது விற்ற வாலிபர் கைது

சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மது விற்ற வாலிபர் கைது
Published on

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் குமரன் கோவில் பகுதியில் பங்காளாப்புதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் விதமாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

சோதனையில் மோட்டார்சைக்கிளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பெரியகொடிவேரி அருகே உள்ள வேட்டுவன்புதூர் பகுதியை சேர்ந்த சின்னமாரப்பன் (வயது 58) என்பதும், மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து சின்னமாரப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com