search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
    X

    108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர்.

    ஈரோடு:

    வட மாநிலத்தை சேர்ந்தவர் சம்பு மகா நந்தா. இவரது மனைவி காயத்ரி. இவர்கள் இருவரும் தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆலாங்காட்டு புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காயத்ரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவசர காலம் மருத்துவர் காயத்ரியை குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே காயத்ரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட விஜயமங்கலம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவசரகால மருத்துவர் ஆம்புலன்சை சாலையோரமாக நிறுத்தி காயத்ரிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் காயத்ரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் நலமாக உள்ளனர்.

    இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×