தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவியதுதீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை தீயில் எரிந்து சேதமானது
தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Published on

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட அனுமன்பள்ளி கொளத்தூர் பகுதியில் சம்பவத்தன்று மாலையில் கவுரி என்பவர் தன்னுடைய மாட்டு கொட்டகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு தகரத்தால் வேயப்பட்ட மாட்டு கொட்டகையில் தீ பரவியது. பின்னர் இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மாட்டு கொட்டகை தீயில் எரிந்து சேதமானது.

மின் கசிவு காரணமாக ஸ்கூ ட்டரில் தீ விபத்து ஏற்ப ட்டதா? என்பது குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com