search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றம்
    X

    ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றம்

    • வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில்வழியில் ஆய்வு நடத்தினர்.
    • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பஸ் நிலையம் நிழற்குடை அருகே குடியிருப்பு பகுதி, கடைகள் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் மனு அளித்திருந்தனர்.

    இதையடுத்து வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில்வழியில் ஆய்வு நடத்தினர்.

    அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஆவணங் களில் உள்ளவற்றுக்கு மாறாக ஏதேனும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது .நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளது.விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×