search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை கே.டி.சி. நகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    பாளை கே.டி.சி. நகரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

    • நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் முத்துகுட்டிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். கோடைகாலம் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் ஏற்படும் திடீர் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின்தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மாலை 6 மணிக்கு மேல் மின் நுகர்வு அதிகம் இருக்கும் காரணத்தால் அனைத்து அதிகாரிகளும் தொடர் கண்காணிப்பில் இருக்கவும் தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    Next Story
    ×