என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கே.டி.சி.நகரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
- நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் அதிகாரிகள், அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற்பொறியாளர் அலுவலகம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் அதிகாரிகள், அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story






