

காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 வது நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துகுட்பட்ட 12 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் குப்பைகள் எடுத்துச் செல்லும் எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன்,செந்தில் ஆகியோர் முன்னில வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வாகனங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன் பேரூர் கழக செயலாளர் பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சங்கீதா கேசவன், நித்தியா சங்கர், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், அஸ்லாம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.