search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில் மின்சிக்கன விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியை ஆர்.டி.ஓ. சந்திரசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    பேட்டையில் மின்சிக்கன விழிப்புணர்வு பேரணி

    • மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது
    • நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார்

    நெல்லை:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக நெல்லை மாவட்டத்தில் மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார். நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறி யாளர் குருசாமி தலைமை தாங்கினார்.

    நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் சங்கர் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வகுமார், செயற்பொறியாளர்கள், கற்பகவிநாயக சுந்தரம், ஜான் பிரிட்டோ, உதவி செயற் பொறியாளர்கள் முத்துசாமி , சின்னசாமி, சைலஜா, கலா ராஜகோபால், தங்க முருகன், ராஜசேகர், குத்தாலிங்கம், உதவி மின்பொறியாளர்கள், சரவணன், அருணன், சரவணகுமார், முருகன், சரவணன், ஜெனட் மல்லிகா, ஜெயஸ்ரீ எழில், மேகலா, திரேசா பாக்கியவதி, ஆன்சிங்ரூபலா, மனோகரன், அபிராமி நாதன், வெங்கடேஷ் மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×