இடையகோட்டையில் கல்வி வளர்ச்சி நாள் விழா

இடையகோட்டையில் இல்லம் தேடி கல்வி சார்பாக கல்வி வளர்ச்சி நாள்விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தன்னார்வலர்கள், பெற்றோர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கல்வி வளர்ச்சிநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்.
கல்வி வளர்ச்சிநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்.
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டையில் இல்லம் தேடி கல்வி சார்பாக கல்வி வளர்ச்சி நாள்விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட திட்ட அலுவலர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி செல்லமுத்து ,ஜென்சி செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணைத் தலைவர், இல்லம் தேடி கல்வி பழனி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல்கரீம், ஒட்டன்சத்திரம் வட்ட பொறுப்பாளர்கள்கீதா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com