search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபாத் போராட்டம் எதிரொலி
    X

    அக்னிபாத் போராட்டம் எதிரொலி

    அக்னிபாத் போராட்டம் எதிரொலியால் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண–வர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

    இதையொட்டி ரெயில்வே நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம்- பரவுனி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12522) நேற்று எர்ணாகுளம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.

    ஈரோடு-பரவுனி வரை பகுதியாக ரத்து செய்ய–ப்பட்டது, செகந்திராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ரயில்(17230) சேவை நேற்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் திருவனந்தபுரம்- செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் (17229) சேவை நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×