search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடத்தையில் சந்தேகம் : தீக்குளித்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
    X

    கோப்பு படம்

    நடத்தையில் சந்தேகம் : தீக்குளித்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

    • மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி கணவர் கண்டித்து வந்துள்ளார்.
    • மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்ததில் படுகாயமடைந்:து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது33). குணசேகர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

    இதனையடுத்து கன்னிவாடி போலீசில் பஞ்சவர்ணம் தனது கணவர் மீது புகார் அளித்தார். விசாரணைக்கு இன்று போலீசார் அழைத்திருந்த நிலையில் வீட்டிலேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பஞ்சவர்ணம் தீக்குளித்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடலில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனை யடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×