தி.மு.க.வின் நீட் விலக்கு பிரசாரம்: ஆ.ராசா எம்.பி கையெழுத்து

இணையம் மூலம் கையொப்பத்தை பதிவுசெய்தார் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
தி.மு.க.வின் நீட் விலக்கு பிரசாரம்: ஆ.ராசா எம்.பி கையெழுத்து
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தி.மு.க சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதற்காக அவர்கள் மாவட்ட அளவில் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கழக துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா ஊட்டி முகாம் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலையில் இணையம் மூலம் கையெழுத்தை பதிவுசெய்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, மாநில ஆதிதிராவிடர் நலகுழு துணைசெயலாளர் பொன்தோஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் சதகத்துல்லா, தொரை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com