என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பூரில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது
வேப்பூரில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வசிப்பவர் பாஸ்கர். தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் கடந்த 7-ந் தேதி ஐந்தே முக்கால் பவுன், ரூ.18 ஆயிரம் திருட்டு போனது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்ததால், போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே ஊரை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது 27), என்பதும், கவுன்சிலரின் மகன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






