search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் பழங்குடியின மக்களுக்கு தேசிய கொடி வினியோகம்
    X

    கோத்தகிரியில் பழங்குடியின மக்களுக்கு தேசிய கொடி வினியோகம்

    • உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.
    • வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன

    அரவேணு:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது.

    அதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் நாளை வரை, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மக்களும் ஆர்வமுடன் கொடி ஏற்றி வருகின்றனர்.

    நீலகிரியில், 4 நகராட்சி, 11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.

    பா.ஜ., சார்பிலும் வீடுதோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது. தவிர, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் நேற்று ஏற்றப்பட்டன

    கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கோத்தகிரி அருகே உள்ள பூர்வக்குடி மக்களான கோத்தர் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு சென்று தேசிய கொடி வினியோகித்து, வீடுகளில் தேசிய கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அவர்களும் தங்கள் வீடுகளில் தேசியை கொடி ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் கோத்தர் பழங்குடியின கிராமத்தில் உள்ள ஊர்தலைவர், பொது மக்கள் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×