search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடை நடத்துவதில் தகராறு; அரசு ஊழியர் மீது வழக்கு
    X

    கடை நடத்துவதில் தகராறு; அரசு ஊழியர் மீது வழக்கு

    • பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது40). இவர் அப்பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.
    • இந்த கடையை அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான லெட்சுமணன் (62) என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிறிது காலம் அவகாசத்தில் கடையை காலிசெய்து தருவதாக மகேந்திரன் கூறியதாக தெரிகிறது.

    நெல்லை:

    பேட்டை வி.வி.கே. தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது40). இவர் அப்பகுதியில் ஒரு டீக்கடை நடத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு இந்த கடையை அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான லெட்சுமணன் (62) என்பவருக்கு விற்பனை செய்ததாகவும், சிறிது காலம் அவகாசத்தில் கடையை காலிசெய்து தருவதாக மகேந்திரன் கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் கடையை கேட்க லெட்சுணன் சென்றதாக தெரிகிறது. அப்போது கடை பூட்டியிருந்ததால் கதவின் மீது மேல்பூட்டு போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மகேந்திரன் பேட்டை போலீசில் புகார் செய்தனார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×