வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வரி வசூல் முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.
வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில்வரி, குத்தகை இனம் நிலுவையை வசூலிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சொத்துவரி, குடிநீர் கட்டணம் நீண்டகாலமாக செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி வரி பாக்கி வைத்திருந்ததால் 4-வது மண்டலத்தில் 8 குடிநீர் இணைப்புகளையும், 1-வது மண்டலத்தில் 7 குடிநீர் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். ஒரேநாளில் ரூ.51 லட்சத்து 11 ஆயிரத்து 977 வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வரி வசூல் முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com