search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமார் படத்திற்கு அஞ்சலி
    X

    கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் படத்திற்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் மரியாதை செலுத்திய காட்சி.

    விழுப்புரத்தில் டி.ஐ.ஜி. விஜயகுமார் படத்திற்கு அஞ்சலி

    • கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.
    • டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. மறைந்தவிஜயகுமார். திரு உருவப்படத்திற்கு தமிழ்நாடு சட்ட ஒழுங்கு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி , அவர் கடந்த காலங்களில் ஆற்றிய பணிகளையும் எடுத்துரைத்து அவருக்கு புகழாரம் செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ,விழுப்புரம் டி.ஜி.பி. ஜியாஉல்ஹக், காஞ்சிபுரம் டி.ஐ.ஜி. பகலவன். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்க் சாய், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் ,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண்உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த டி.ஐ. ஜி விஜயகுமாருக்குஅஞ்சலி செலுத்தினார்கள். விழுப்புரம் சரகம் மற்றும் காஞ்சிபுரம் சரக போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி.அருண் தலைமையில் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

    Next Story
    ×