search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
    X

    குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கலந்து கொண்டு பேசினார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள்நல்வாழ்வு த்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேருக்கு மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உலகளாவிய தொற்றுகளில் இந்தியாவில் தமிழகத்தில் 25 சதவீதம் பேர்இப்பரவல் காணப்படுகிறது. இந்நோய்ப்பரவலை கட்டுப்படுத்திட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும்குழந்தைகள் நலமையங்களின் வாயிலாக மொத்தம் 1,382 நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்றைய தினம்வழங்கப்படுகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ள 4,58,855 நபர்களுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 97,329 பெண்களுக்கும் என மொத்தம் 5,56,184 நபர்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காலை உணவு அல்லது மதிய உணவுசாப்பிட்ட பிறகு மாத்திரையை நன்கு கடித்து, மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் (200 மி.கி) அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி), 20-30 வயது வரை உள்ள பெண்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி) வழங்கப்பட வேண்டும். மேலும், விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வருகின்ற 16 - ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

    இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுசு காதாரத்து றையுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நல மைய பணியாளர்கள், பெற்றோர்ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் குடற்புழு மாத்திரையின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேணடும் என கூறினார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை இயக்கநர் (சுகாதாரப் பணிகள்) ராஜா, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள்கலந்து கொண்டனர்.

    Next Story
    ×