search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் இன்று நள்ளிரவு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி
    X

    சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

    பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் இன்று நள்ளிரவு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

    • நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடை விழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டா டப்படும்.

    வருசாபிஷேகம்

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி காலை 8 மணிக்கு வருசாபி ஷேகத்துடன் தொட ங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பா ஞ்சலி,நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்யும் திரு விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. கடந்த 1-ந் தேதி காலை 8 மணிக்கு மேளதாளம் வாண வேடிக்கையுடன் பால்குடம் எடுத்துபவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு7 மணிக்கு பரதநாட்டியம், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீப ஆரா தனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

    நேற்று காலை 9 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நடந்தது.

    இன்று நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல். நள்ளிரவு 3மணிக்கு அக்னி குண்டத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், நாளை (4-ந் தேதி) இரவு 8 மணிக்கு கேரள புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி , 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபிஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, இரவு12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×