காரமடை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தாசர்களுக்கு படையிலிட்டு வழிபாடு கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம்
காரமடை பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது

.

இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மேலும், புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அரங்கனை தரிசனம் செய்தும், தாசர்களுக்கு படையலிட்டும் வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாத சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து தாசர்களுக்கு படையிலிட்டு வழிபாடு செய்தனர்.

கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவில் நிர்வாகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன.ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்துள்ளார்.

இதேபோல் கோைவ பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்தனர்.

அவர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

கோவை ராமர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகளவிலான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com