search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை சைனிக் பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி
    X

    உடுமலை சைனிக் பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி

    • தீ விபத்து ஏற்பட்டால் எது போன்ற பொருட்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும்.
    • தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள சைனிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை மூலம் தீயை அணைப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் நிலைய அலுவலர் கோபால் தலைமை வகித்தார். இந்த சிறப்பு பயிற்சியில் தீ விபத்துக்களை தடுப்பது, தீ விபத்தின் வகைகள், தீயணைப்பு கருவிகளின் வகைகள் மற்றும் எந்த வகையான தீ விபத்து ஏற்பட்டால் எது போன்ற பொருட்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும்.

    தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, தீயணைப்பு வாகனத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தீயணைப்புத்துறை காவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×