என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்ப படம்
ஆண்டிபட்டி அருகே தலைசிதைந்த நிலையில் ஆண் பிணம்
- சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
- இறந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகை அணை சாலை சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து திம்மரசநாயக்கனூர் பிட்-2 வி.ஏ.ஓ. தேவி ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலியானது தெரிய வந்துள்ளது.
Next Story






