என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆலங்குளம் அருகே அரசு பள்ளியில் கலைத்திருவிழா
Byமாலை மலர்26 Nov 2022 8:25 AM GMT
- மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது
- மாணவர்கள் கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம், கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்
ஆலங்குளம்:
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் அந்தந்த பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று கலைத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். கிராமிய குழு நடனம், தனிநபர் நடனம் நடந்தது. மாணவியர் கிராம புறபாட்டுக்கு அசத்தலாக நடனமாடினர்.இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X