என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்திய வாலிபர்
- கடலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்திய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- அப்போது அங்கு குடி போதையில் இருந்த சிவராஜ் திடீரென்று வச்சலா கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வச்சலா (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 25). சம்பவத்தன்று வச்சலா வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு குடி போதையில் இருந்த சிவராஜ் திடீரென்று வச்சலா கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த வச்சலா கையை உதறிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சித்த போது சிவராஜ் திடீரென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கம் படுத்தியதாக கூறபடுகிறது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் சிவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






