search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருவிகுளம்  ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    X

    குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டத்தில் வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களை படத்தில் காணலாம்.


    குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    • குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
    • அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ம.தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 11-வது வார்டு கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், 17-வது வார்டு கவுன்சிலர் ராமலட்சுமி பாண்டியராஜ், 14-வது வார்டு கவுன்சிலர் வீரலட்சுமி செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

    கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்றிய குழு தலைவர் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், ஒன்றியத்தின் தென் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஒன்றிய குழு தலைவர் பகுதிகளில் பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் ஒன்றிய குழு தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், நிதிகள் முறையாக செலவு செய்யப்பட வில்லை என்றும், ஒன்றிய பொறியாளர் ரமேஷ் என்பவர் ஆலோசனையின்படி பணிகள் தேர்வு செய்யப்படுவதாகவும் கவுன்சிலர்களை கலந்து கொள்ளாமலும் விவாத த்திற்கு கொண்டுவராமலும் தீர்மானங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசியதை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர். மேலும் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக கூறினர்.

    Next Story
    ×