தொடர் மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது.நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
தொடர் மழை: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

பென்னாகரம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கடுமையாக சரிந்து வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நேற்று 4 ஆயிரம் கனஅடியாக சரிந்து வந்தது.

தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் தொடர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று இரவு 7 ஆயிரம் கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று அதிகாலை 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 13000 கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலியால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிக்குண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com