search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை சேர்க்க காங்கிரசார் ஆர்வம் - சுரண்டை நகராட்சி தலைவர் தகவல்
    X

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணி நடைபெற்ற போது எடுத்த படம்.


    வாக்காளர் பட்டியலில் இளைஞர்களை சேர்க்க காங்கிரசார் ஆர்வம் - சுரண்டை நகராட்சி தலைவர் தகவல்

    • சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.
    • வீட்டின் முன்பு சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கூறினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும் வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் சுரண்டை நகராட்சி பகுதி முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொது மக்களும் முன்னெச்சரிக்கையாக குடிதண்ணீரை காய்ச்சி அருந்த வேண்டும். வீட்டில் முன்பு சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கூறினார்.

    இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி சவுந்தர்,இளைஞர் காங்கிரஸ் தலைவர் கஸ்பா செல்வம் என்ற அருணாசலம்,இளைஞர் காங்கிரஸ் மகேந்திரன்,பாலா,ராதா காங்கிரஸ் நிர்வாகிகள் களப்பணி ஆற்றிவருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

    Next Story
    ×