பல்லடம் அரசு அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

கலெக்டர் வினீத் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சேவை வழங்க அறிவுறுத்தினார். தாலுகா அலுவலகத்தில் துறை ரீதியான கோப்புகளை ஆய்வு செய்தார்.
கலெக்டர் கோப்புகளை ஆய்வு செய்த காட்சி 
கலெக்டர் கோப்புகளை ஆய்வு செய்த காட்சி 
Published on

பல்லடம் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் பல்லடம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனைஉள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த கலெக்டர் வினீத் அங்குள்ள படுக்கை வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், இருப்பு வைத்துள்ள மருந்துகளில் காலாவதியானவைகளை அகற்றவும், கரடிவாவி சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவ சேவை வழங்கவும் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், அய்யம்பாளையத்தில் உள்ள ரேசன் கடை ஆகியவற்றை பார்வையிட்டார். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் துறை ரீதியான கோப்புகளை ஆய்வு செய்தார். சர்வே பணிகளை தாமதம் இன்றி செய்து தரவும், நீதி மன்ற உத்தரவுகளை உரிய கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.மேலும் அங்குள்ள திருப்பூர் மாவட்டத்திற்குரிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீசாரின் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உடன் இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com