search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூர் பெரியகுளத்தில் புதிதாக படகு குழாம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    கீழப்பாவூர் பெரியகுளத்தில் புதிதாக படகு குழாம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு

    • படகு குழாம் அமைப்பதால் சுற்றுலாத்துறை மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்கும்.
    • கீழப்பாவூர் - நாகல்குளம் இணைப்பு பாலம் கட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பேரூராட்சியின் மையப்பகுதியில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய குளமான கீழப்பாவூர் பெரியகுளத்தில் சுற்றுலாத்துறை மூலமாக புதியதாக படகு குழாம் அமைப்பது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சுற்றுலாதுறை வளர்ச்சி அலுவலர் சீதாராமன் ஆகியோர் முன்ஆய்வு பணி மேற்கொண்டனர்.

    இதில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கீழப்பாவூரில் படகு குழாம் அமைப்பதால் கீழப்பாவூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவது மட்டுமின்றி தென்காசியில் சுற்றுலாத்துறை மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்கும் என அவர்கள் கூறினர்.

    தொடர்ந்து கீழப்பாவூர் பெரியகுளத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் கீழப்பாவூர் - நாகல்குளம் இணைப்பு பாலம் கட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

    Next Story
    ×