search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி பகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    உப்புக்கோட்டை ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டார்.

    போடி பகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பராமரிக்கப்படும் பதிவேட்டில் உரிய பதிவு களை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவல ர்களை அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட உப்புக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சிப்பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.17.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உறை கிணறு கட்டுமானப்பணி, கொண்டல் நாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள பணி,

    ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகத்திட்ட ரேசன் கடைகட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வயிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, உப்புக்கோட்டை ஊராட்சி க்குட்பட்ட மகளிர் சுகாதார வளாகம் உப்புக்கோட்டை ஊராட்சி மன்ற அலு வலகத்தில் வளர்ச்சித்திட்ட ப்பணிகள் குறித்த பதிவேடு களை ஆய்வுசெய்தார். காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் பதிவேட்டில் உரிய பதிவு களை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவல ர்களை அறிவுறுத்தினார்.

    Next Story
    ×