search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16-ந்தேதி முதல் வருவாய் தீர்வாயம்: கலெக்டர் தகவல்
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16-ந்தேதி முதல் வருவாய் தீர்வாயம்: கலெக்டர் தகவல்

    • குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1432-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்கண்டவாறு வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் வருகிற 16, 17, 18, 19, 23,24 ஆகிய 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 16, 17, 18,19, 23 ஆகிய 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    உத்திரமேரூர் வட்டத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை, மே 23 முதல் 26 வரை ஆகிய 8 நாட்கள் காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    வாலாஜாபாத் வட்டத்தில் வருகிற 16 -ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மற்றும் மே 23-ந்தேதி ஆகிய 5 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    முன்னதாகவே, சம்பந்தப்பட்டதாசில்தாரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது, வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் முன்கூட்டியே கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×