search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றியவர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அமைச்சர் புகழாரம்
    X

    பயனாளிகளுக்கு, அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கினார். அருகில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் உள்ளனர்.

    அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றியவர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அமைச்சர் புகழாரம்

    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.
    • 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, பணியிட மாறுதலில் விடைபெற்று செல்லும் மாவட்ட கலெக்டரை வாழ்த்தி வழியனுப்பும் விழா நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தி ற்கு செயல்வடிவம் கொடுக்க அனுபவம், ஆற்றல் வாய்ந்தவர் கலெக்டராக இருக்க வேண்டும். அப்படிப்ப ட்டவர் தான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இந்த முழு பொறுப்புக்குக் காரணமானவர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.அவர் மாவட்ட கலெக்டராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்டு நிறைவேற்றியவர்.

    விளம்பு நிலை மக்களுக்கு செந்தமிழ் நகர் என்ற பெயரில் குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்தார். இதேபோல, வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். இதேபோல, பல்வேறு திட்டங்களை கலெக்டர் செயல்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, வருவாய் கோட்டா ட்சியர்கள் பிரபாகர், பூர்ணிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கலெக்டரை பாராட்டி பேசியதுடன் அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை நினைவு பரிசாக ஏராளமானோர் வழங்கினார்.

    Next Story
    ×