தமிழ்நாட்டில் பட்டய கணக்காளர் கல்வியின் மையமாக திகழும் கோவை

கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பட்டயக் கணக்காளர்களின் தேவை அதிகம் உள்ளது.
தமிழ்நாட்டில் பட்டய கணக்காளர் கல்வியின் மையமாக திகழும் கோவை
Published on

கோவை

பட்டய கணக்காளர் மையமாக கோவை திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் இக்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ள்ளது.

இதுகுறித்து தென்னி ந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் கோவையை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மத்திய அரசின் பெரு நிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ).

நாடு முழுவதும் பட்டய கணக்காளர் கல்வி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்துவதில் தொடங்கி தேர்வுகளை நடத்துவது, சி.ஏ-வாக பணியாற்ற தொடங்கிய பின் தேவையான பயிற்சிகளை அளித்தல், பணியை கண்காணித்தல், தவறு செய்பவ ர்களுக்கு தண்ட னை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடி க்கைகளை இந்தி ய பட்டய கணக்கா ளர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பட்டயக் கணக்காளர்க ளின் தேவை அதிகம் உள்ளது.

எனவே, எத்தனை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றாலும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசுடன் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் சென்னையி ல் தொடர்ந்து நடத்தப்ப ட்டு வருகிறது. இதற்கென பிரத்யேக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,இத்திட்டத்தால் இன்று கிராமப்புற மாணவ, மாணவிகள் மத்தியில் பட்டய கணக்காளர் கல்வி குறித்த விழிப்புணர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டய கணக்காளர்கள் உள்ளனர். 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டய கணக்காளர் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மாணவிகள். நாட்டில் மொத்தம் பணியாற்றும் பட்டய கணக்காளர்களில் 28 சதவீதத்தினர் பெண்கள்.

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதால் பட்டய கணக்காளர் கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பட்டய கணக்காளர் கல்வியின் மையமாக கோவை திகழ்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மாணவ, மாணவிகள் பலர் கோவையில் தங்கி பட்டய கணக்காளர் கல்வி பயின்று வருகின்றனர்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு பட்டய கணக்காளர் கல்வி மேற்கொள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நிதியுதவி திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com