ஒட்டன்சத்திரத்தில் தூய்மை விழிப்புணர்வு பேரணி

மக்கும் குப்பை, மக்காத குப்பை - தரம் பிரித்து வழங்குவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர். அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரத்தில் மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆலோசனையின் பேரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக குப்பையில்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை நகர செயலாளர் வெள்ளைச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணிக்கு நகர்மன்ற தலைவர் திருமலைசாமி முன்னிலை வகித்தார். "எனது குப்பை எனது பொறுப்பு" "மக்கும் குப்பை, மக்காத குப்பை" தரம் பிரித்து வழங்குவோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர்.

இதில் ஆணையாளர் (பொ) சக்திவேல், உள்ளிட்ட தூய்மை இந்தியா திட்டப்பணியாளர் அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com