search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பொருளை கடத்தினால் கடும் நடவடிக்கை- குடிமைபொருள் வழங்கல் துறை எச்சரிக்கை
    X

    உணவு பொருளை கடத்தினால் கடும் நடவடிக்கை- குடிமைபொருள் வழங்கல் துறை எச்சரிக்கை

    • பொது விநியோக பொருள்களான கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும்
    • புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    போரூர்:

    சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம் வருமாறு :- பொது விநியோக பொருள்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும் பதுக்குவதும் குற்றமாகும் இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது விநியோக பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×