மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி தஞ்சையில் கிறிஸ்தவர்கள் ஜெப நடை பயணம்

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் ஜெப நடைபயணம் மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.
தஞ்சை மிஷனரி தெருவில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.
தஞ்சை மிஷனரி தெருவில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நீடித்து வருகிறது.

இதனால் அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று தஞ்சை மிஷனரி தெருவில் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.

இதற்கு கூட்டமைப்பின் சேர்மன் பிஷப் மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறும் போது :-

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்பட வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்ட மைப்பு சார்பில் ஜெப நடை பயணம் மேற்கொண்டோம்.

மேலும் தஞ்சை மாவட்ட த்தில் கிறிஸ்துவ பணி மேற்கொண்ட மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

இந்த ஜெப நடை பயணத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர் .

X

Maalai Malar
www.maalaimalar.com