search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை நள்ளிரவில் பெய்த கோடை மழை
    X

    சென்னை நள்ளிரவில் பெய்த கோடை மழை

    • பிற மாவட்டங்களில் மழை பெய்வதால் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சென்னை எழும்பூர், சேத்துபட்டு, அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேருள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    கடந்த சில நாட்களாகவே சென்னையில் மந்தமான வானிலையும் , பிற மாவட்டங்களில் மழை பெய்வதால் சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது.

    சென்னை எழும்பூர், சேத்துபட்டு, அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேருள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கோடை வெயிலில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு இந்த கோடை மழை ஒருவித மன நிம்மதியை கொடுத்துள்ளது. காலை 7 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×