search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை எழும்பூர்- மன்னார்குடி விரைவு ரெயில் பகுதியாக ரத்து
    X

    சென்னை எழும்பூர்- மன்னார்குடி விரைவு ரெயில் பகுதியாக ரத்து

    • சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும்.
    • இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக சில ரெயில்கள் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போர்ட்) அதிவிரைவு ரெயிலானது (வண்டி எண்.12653) நாளை முதல் 3-ம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

    சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர்- மன்னார்குடி மன்னை விரைவு ரெயிலானது (வண்டி எண்.16179) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும்.

    சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -மங்களூர் விரைவு ரெயிலானது (16159) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும்.

    காரைக்குடி - சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது (12605, 12606) இன்று (செவ்வாய்க்கிழமை) தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்குப் புறப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×