திண்டுக்கல்லில் ஆபத்தான வளைவுகளில் விபரீதமாக திரும்பும் பஸ்கள்: மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி

சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. குறிப்பாக ஸ்கீம்ரோட்டில் திரும்பும்போது ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.காலை நேரத்தில் வேகமாக வரும் பஸ்கள் அதில் மோதும் வாய்ப்பு உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
டிரான்ஸ்பார்மர் மீது மோதுவது போல் செல்லும் பஸ்.
டிரான்ஸ்பார்மர் மீது மோதுவது போல் செல்லும் பஸ்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சேலம், கரூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து வரும் பஸ்களும், நத்தத்தில் இருந்து வரும் பஸ்களும், ரவுண்டானாவை கடந்து சாலைரோடு, அரசு ஆஸ்பத்திரி, பூமார்க்கெட் வழியாக பஸ் நிலையம் சென்று வந்தது.

இதனால் கிராமங்களில் இருந்துவரும் பொதுமக்கள் கோட்டை மாரியம்மன்கோவில், பூமார்க்கெட், அரசுஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தொலைதூரம் சுற்றிச்செல்வதால் மாற்று வழியாக ரவுண்டானாவில் இருந்து மெங்கில்ஸ்ரோடு மற்றும் ஸ்கீம்ரோடு வழியாக பஸ்நிலையம் செல்கிறது. இந்த சாலை மிகவும் குறுகியதாக உள்ளது. குறிப்பாக ஸ்கீம்ரோட்டில் திரும்பும்போது ஆபத்தான முறையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது.

காலை நேரத்தில் வேகமாக வரும் பஸ்கள் அதில் மோதும் வாய்ப்பு உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தனியார் பஸ்கள் டைமிங் பிரச்சினையில் ஒருவரையொருவர் முந்தி செல்ல முயல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள் பஸ்களில் வருகின்றனர். அவர்களையும் ஆபத்தில் சிக்க வைக்கும் முறையில் பஸ்களை இயக்குவதால் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே போக்குவரத்து அதிகாரிகள் பஸ்நிலையத்திற்கு மாற்றுவழியில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com