search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை பஸ்நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள் - பயணிகள் தவிப்பு
    X

    பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விடும் பஸ்கள்.


    நிலக்கோட்டை பஸ்நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள் - பயணிகள் தவிப்பு

    • மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.
    • பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பஸ் நிலையம் நிலக்கோட்டை மையப் பகுதியான இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழமையான தாலுகாவில் நிலக்கோட்டையும் ஒன்று. கோட்டை பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான கிராமப் பகுதிகளில் இருந்து நிலக்கோட்டைக்கு பூ மார்க்கெட் பூ விற்பதற்கும்,

    அன்றாட வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.

    இவ்வாறு வரும் பஸ்களில் திண்டுக்கல் பஸ் மட்டுமே நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்கிறது.மதுரை,பெரியகுளம், கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் செல்வதில்லை.

    பஸ் நிலையம் முன்பே பயணிகளை நிறுத்தி இறக்கி விட்டு செல்கிறார்கள். இவ்வாறு செல்வதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பஸ்நிலையம் தெரியாமல் அலையும் சூழல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் நிலக்கோட்டை பஸ்நிலையத்தினுள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×