என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிடப்பில் போடப்பட்ட பணி சேறும் சகதியுமாக மாறிய புல்லாவெளி-சோலைக்காடு சாலை
- மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர்.
- சாலை சேறும் சகதியுமாக உள்ள தால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரையிலான மலைப்பாதை யில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது புல்லா வெளி-சோலைக்காடு இடையே தார் சாலை அமைக்கப்பட்டு ள்ளது.
ஆனால் புல்லாவெளியில் இருந்து அரை கி.மீ. தூரத்துக்கு தார் சாலை இன்னும் அமைக்கப்பட வில்லை. தார் சாலை அமைக்காமல் மண் மட்டும் போடப்பட்டுள்ளது. இப்பகு தியில் சில தினங்களாக மழை பெய்து வருவதால் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறியது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரம ப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். தற்போது சோலைக்காடு, புலையன் வளைவு, நேர்மலை, கூட்டுக்காடு போன்ற பகுதிகளில் மிளகு சீசன் தொடங்கியுள்ளது. சாலை சேறும் சகதியுமாக உள்ள தால் கூலி தொழிலாளிகள் வேலைக்கு செல்வதற்கு தயங்குகின்றனர்.
மேலும் இந்த சாலையில் சில இடங்களில் இன்னும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்து டன் சென்று வருகின்றனர். சாலையோரம் 200 அடி அபாய பள்ள த்தாக்கு உள்ளது. எனவே மலை ப்பாதை யில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்