search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    • பீரோவை உடைத்து அதில் இருந்த 12 ½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
    • திடீரென சி.சி.டி.வி காமிரா வேலை செய்ய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் உடனே வீடு திரும்பினார்

    கோவை:

    கோவை பேரூர் தீத்திப்பா ளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சர்மிளா (57). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டுக்கு சென்றார்.

    சர்மிளாவின் மகன் வீட்டில் ெபாருத்த ப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை அடிக்கடி தனது செல்போனில் பார்த்து வந்தார். அப்போது திடீரென சி.சி.டி.வி காமிரா வேலை செய்ய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனே வீடு திரும்பினார்.

    அங்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 ½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சர்மிளா பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை ராமநாதபுரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜேசுராஜ் வெலிங்டன் (47). இவர் அதே பகுதியில் பேக்கரி ஸ்ரீகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு பேக்கரியை பூட்டி விட்டு சென்றார்.

    மறுநாள் காலையில் திறக்க வந்த போது பேக்கரி ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ. 42 ஆயிரத்தை காணவில்லை. ஜேசுராஜ் வெலிங்டன் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    Next Story
    ×