search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பஸ் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபான கடையை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம்
    X

    உடன்குடி பஸ் நிலையம் எதிரே உள்ள அரசு மதுபான கடையை மாற்றக்கோரி முற்றுகை போராட்டம்

    • பொதுமக்கள், வியாபாரிகள் பஸ் நிலைய பயணிகள் அனைவருக்கும் பெரும் இடையூறாக உள்ள பஸ் நிலைய மதுபானக்கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
    • தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி பஸ்நிலையம் எதிரே உள்ள அரசு மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி வியாபாரிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மதுபான கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    போராட்டம்

    தகவல் அறிந்து குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் விரைந்து வந்து இந்த இடத்தில் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, பேரூராட்சி திடலில் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என கூறினார். இதனை அடுத்து முற்றுகையிட்ட மக்கள் உடன்குடி பேரூராட்சி திடலுக்கு வந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். பேரவை யின் உடன்குடி வட்டார கவுரவ தலைவர் ரவிக்குமார், நிர்வாகிகள் ரமேஷ், சுபாஷ், ராஜாராம், கணேஷ், முருகே சன், பாலசிவசங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள், வியாபாரிகள் பஸ் நிலைய பயணிகள்ள அனைவருக்கும் பெரும் இடையூறாக உள்ள பஸ் நிலைய மதுபானக்கடையை உடனே ஆப்புறப்படுத்த வேண்டும், வியாபாரியைத் தாக்கி காயப்படுத்திய பார் உரிமையாளரை உடனே கைது செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் ஏன இர்ப்பாட்டத்தில் கோஷம் மிட்டனர் இக்.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைமை ஓருங்கிணைப்பாளர் அருண்குமார், நெல்லை மாவட்ட தலைவர் ராஜசேகர், மற்றும்கணேசன் ஆகியோர் பேசினார்கள். இதில், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட சங்க நிர்வாகிகள் ஜெபகுமார், கார்த்திகேயன், வாகைமணி, புஷ்ப-ங்கம் முத்துக்குட்டி, பொன்பெருமாள், சசிகலா, குமரேசன், மகேஸ்வரன், மகாராஜன், வேல்பாண்டி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலர் பூமயில், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×