search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி குமாரர் கோவிலில்  பா.ஜ.க.வினர் புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி
    X

    இலஞ்சி குமாரர் கோவிலில் பா.ஜ.க.வினர் புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி

    • இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சில்லரைபுரவு ஊராட்சி தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    டெல்லியில் அமைய உள்ள நினைவிடத்திற்கு என் மண் என் தேசம் என்கின்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தென்காசி தெற்கு ஒன்றியம் சார்பில் இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவரும், தென்காசி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மற்றும் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    தென்காசி தெற்கு ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் அசோக்பாண்டியன், குற்றாலம் கிளை தலைவர் செல்வராஜ், குத்துக்கல்வலசை ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×